Sunday 15 May 2011

(தே.மு.தே.பி) தேர்தலுக்கு முன் தேர்தலுக்கு பின் ஜோக்ஸ்

                                              (தே.மு.தே.பி)
     எதோ புதுக்கட்சியோட பேரு இல்லைங்க.(தேர்தலுக்கு முன் தேர்தலுக்கு
பின்) ஜோக்ஸ் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல சும்மா சிரிப்புக்காக
படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும்.
                                                 தேர்தல்(தேர்தள்)
          1 . "இங்கே தேர்தலுக்கு பணம் கொடுக்கிறதா கேள்விப்பட்டு
வந்தோம்  உண்மையா?"
                "சத்தியமா இல்லைங்க இந்த பழுதான தேர் தள்ள பணம்
கொடுத்ததை யாரோ தேர்தல் என்று தப்பா சொல்லியிருக்காங்க....!!!"

       2.  "தலைவரு ஏன் ரொம்ப கோபத்துல இருக்காரு?"

            "தேர்தல் செலவு கணக்கு எல்லாத்தையும் சரியா எழுதி
வைங்க பின்னாடி தேவைப்படும் என்று சொன்னாரு!!

            "அதெல்லாம் தேர்தல்ல ஜெயிக்கிறவங்களுக்குத்தான்
உங்களுக்கு இல்லைன்னு சொல்லிட்டாங்களாம் அதான்
கோபத்துல இருக்காரு...!!!"

       3. "தேர்தல் நேரத்துல புத்தகம் வெளியிட்டதற்காக
இவரை போலீஸ் கைது செய்துட்டாங்க...!!!"

           "அப்படியா ! அப்படி என்ன புத்தகம் வெளியிட்டாரு?"

        "வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க 1000 வழிகள்"-என்ற
புத்தகத்தை வெளியிட்டாராம்...!!!"

      4."ஒரு பெக் ரம்-ல கூட ஊழல் பண்ண முடியுமா?'

        "" ஐயோ தலைவரே அது ஸ்பெக்ட்ரம் ஊழல்..!!!""

       5."ஆமா நம்ம தலைவரு கிரிக்கெட் மேட்ச்  பார்க்க போனா
எப்பவும் விஐபி சீட்டுதான் கேட்பாரு இப்ப புதுசா தரைசீட்டு
கேட்கிறாரே என்ன காரணம்?"

           "அதுவா வேறஒன்னுமில்ல சியர்ஸ் லீடர்ஸ் ஆடுறத
பக்கத்துல இருந்து பார்த்து ஜொள்ளுவிடத்தான்...!!!""

       6.    மின் வாரியத்தில் நேர்முகத்தேர்வு
அதிகாரி:     உங்க பேர் என்ன?
வந்தவர்:    அமாவாசை
அதிகாரி:    எந்த ஊர்?
வந்தவர்:   இருட்டு பள்ளம்
அதிகாரி:   உங்களுக்கு பிடித்த இனிப்பு வகை?

வந்தவர்:   இருட்டு கடை அல்வா
அதிகாரி:   உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர்?
வந்தவர்:    .................
அதிகாரி:    யார்யா மின்விசிறிய நிறுத்தியது?
மின் வாரிய அலுவலர்:   கரண்ட் கட் சார்!!!!!!!!

                                               தத்துவம்
    "ஸ்பெக்ட்ரம் பெரிய ஊழல் தான் அதுக்காக அதுல இருக்கிற
பெக் ரம்-ம எடுத்து குடிக்கவா முடியும்.""
                                                ---டாஸ்மாக்குல மப்புல மல்லாந்து 
படுத்துக்கொண்டே யோசிப்போர் சங்கம்---

                            ""கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை"-
(புது வரவு) மக்கள் எனக்கு ஒய்வு அளித்துவிட்டார்கள்.

                                   நான் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை பொதுவாக
சிரிக்க மட்டும் மீண்டும் சந்திப்போம் மாமியார்,மன்னர்,டாக்டர்
ஜோக்குகளுடன்.
                                                                     நன்றி வணக்கம்
                                                            செந்நெல்குடி க.பார்த்திபன்
                                                                                 சிங்கப்பூர்.  

No comments:

Post a Comment