பொதுவாக எனக்கு புத்தகத்தில் வரும் ஜோக்ஸ் மற்றும் கடி ஜோக்ஸ் இவற்றை படிக்க பிடிக்கும். எத்தனை நாளைக்குத்தான் ஜோக்ஸ் படித்துக்கொண்டே இருப்பது நாமளும் ஜோக் எழுதினால் என்ன என்று யோசித்து தினமணி சிறுவர் மணியில் வெளிவரும் கடிஜோக்ஸ் பகுதிக்கு
எனது முதல் கடியை அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பினேன்.கடி என்றவுடன் வாய் அதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது எனவே முதல் கடியை வாய்க்கால் என்ற சொல்லிலே ஆரம்பித்தேன்.எனது முதல் கடி புத்தகத்தில் வந்தது பின் அதைத்தொடர்ந்து சில கடிகளும் வெளிவந்தது.
பதிவுலக நண்பர்களே கடியை படித்து உங்கள் கருத்துக்களையும்தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கடி சிறியதாக தெரிந்தால் அதைப்பெரிதுபடுத்தி பார்த்துக்கொள்ளவும்
கடியை படித்துவிட்டு காதுகளில் ரத்தம் வந்தால் நான் பொறுப்பாக முடியாது.
(மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக்கொள்வதன் மூலமாகத் தனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப் பெரிய கண்டுபிடிப்பாகும் -ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த வில்லியம் ஜேம்ஸ் )
மேலும் கடி மற்றும் ஜோக்ஸ் இவற்றுடன் உங்களை சந்திக்கிறேன்.
நன்றி. வணக்கம்.
செந்நெல்குடி க.பார்த்திபன்,
சிங்கப்பூர்.
வார்த்தை ஜால ஜோக் அடிப்படயில் உ . சுப்பு உசுப்பு அருமை
ReplyDeletesuper. best wishesh
ReplyDelete